recent posts...

Saturday, November 17, 2012

துப்பாக்கி - திரைப் பார்வை


"என் பேச்சே நானே கேக்க மாட்டேன்"னெல்லாம் அலப்பறை பண்ணாத விஜய் என்பதால், விஜய் வெறியர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, துப்பாக்கியில் அவரின் நடிப்பு.
சரசர வென நகரும்படியான திரைக்கதையில், முதல் பாதி போவதே தெரியாமல், அருமையாய் நகர்ந்தது.

மும்பையில் நடந்த தொடர் வெடிகொண்டை மையமாகக் கொண்டு அமைந்த கதை. Sleeper Cell என்ற பயங்கரவாதிகளின் அமைப்பு எப்படி இயங்குகிறது, அதை எப்படி ஹீரோ கண்டுபிடிக்கறாரு, அவங்கள போட்டுத் தாக்கறாரு, என்பது மாதிர்யான கரு.

அரச்ச மாவையே அரைக்காம, வித விதமா திங்க் பண்ணும் முருகதாசுக்கு ஒரு பெரிய நன்னி.

படம் பாத்தப்பரம் Sleeper Cell பத்தி கூகிளிப் பாத்தா, திகிலாத்தான் இருக்கு. பல இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள் நல்லா ட்ரெயின் பண்ணி, எதிரி நாடுகளுக்குள் அனுப்பிடுவாங்களாம். அவங்களும், அந்தந்த ஊரில், சாமான்யனாய், வேலைக்குச் சேர்ந்து, அந்தந்த ஊர் மக்களுடன் கலந்துருவாங்களாம். அப்பாவியா, இப்படி சில பல வருஷங்கள் வரைக்கும், யாருக்குமே சந்தேகம் வராதமாதிரி வாழ்வாங்களாம். இவங்களை அனுப்பிய தீவிரவாத இயக்கங்கள, இவங்களை அப்பப்ப பயங்கரவாத வேலைகளுக்கு உபயோகிச்சிப்பாங்களாம். இந்த Sleeper agentsக்கும், அவங்கள் இயக்கத்தில் வேர யாரெல்லாம் இருக்கான்னு தெரியாது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செவ்வனே செஞ்சு, தன் சாமான்ய வாழ்க்கையை தொடருவாங்களாம்.  பஸ்ஸுல குண்ட வச்சோமா, ட்ரெயினக் கவுத்தோமா, மீட்டிங்குல குழப்பம் பண்ணோமான்னு எப்பயாச்சும் பிசியா இருப்பாங்களாம்.
ஆப்டுக்கிட்டா கூட, இவனுங்க கிட்ட இருந்து, பெருசா எந்த தகவலையும் வாங்கிட முடியாது என்பது கூடுதல் திகில்.

அப்பேர்பட்ட ஸ்லீப்பர் ஏஜெண்ட்டுக்கள், தொடர் வெடிகுண்டுகள் வைக்க ஏற்பாடு செய்யும்போது, விஜய் கோஷ்ட்டீஸ், அவர்களை மடக்கிப் போடுவது, திரில்லான நிமிடங்கள்.

விஜய் ஒரு ராணுவ வீரர். அதிலும், இண்டெலிஜன்ஸ் ரகசிய பிரிவைச் சேர்ந்தவர். ராணுவ யூனிஃபார்ம் சுத்தமா செட் ஆகலை இவருக்கு. ஆனா, சண்டையிலும், நடனத்திலும், எப்பொழுதும் போல் அசத்துகிறார். ஒரு சில காட்சிகளில், இராணுவ வீரர்களின் மேல் பெரும் மரியாதை ஏற்படுத்தச் செய்கிறார்.

கொடூரமாய் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரை பற்றி சொல்லும்போது, "14 நாள் தான் ஆச்சு, அவன் தம்பி அடுத்து இராணுவத்தில் சேந்துட்டான்"னு ஒரு டயலாக் சொல்லுவார். ரொம்பவே புல்லரிக்க வச்சுட்டுது.

"பல உயிரை கொல்லப் பாக்கர அவனுங்களே சாகரதுக்கு பயப்படல, பல உயிரை காப்பாத்த முயற்சிக்கர நாம் ஏண்டா சாகரதுக்கு பயப்படணும்"னு சொல்லும் இடமும் அருமை. ஆனா, அதே டயலாக்கை இரண்டு முறை பயன்படுத்தியது, சரியில்லை.

ஹாரிஸ் எடுபடலை. இரண்டு பாட்டுக்கள் முணுமுணுக்க வைத்தாலும், பின்னணி இசையில், மின்னலே படத்தில் வரும் பிட்டுக்களைப் போட்டு, சீப்பாகிவிட்டார். கூகிள் பாடலில் வரும் ராப் ரக சரணம் அருமை.

சந்தோஷ் சிவன் பெயரைப் பார்த்ததும், ரம்யமான ஒரு சன்செட்டோ, சன்ரைஸோ, குளு குளுன்னு எத்தையாவது காட்டுவார்னு பெருசா எதிர்பார்த்தா, ஒன்னியும் கண்ணுல காட்டல. திரைக்கதையும் அதுக்கு பெருசா இடம் தரலை. கண்ணுக்கு உருத்தாத, நேர்த்தியான ஒளிபரப்பு. ஆனா, கண்ணுக்குள்ளயும் மனசுலையும் ஒண்ணும் பெருசா நிக்கலை.

நாய், துப்பட்டாவை மோப்பம் புடிச்சு விஜய் தங்கையை தேடுவது கொஞ்சம் டூ மச்சு. ஆனாலும், விறுவிறுப்பான காட்சி. அதைத் தொடர்ந்த சண்டை அமக்களமான ஏக்‌ஷன். நிறைய கத்திக் குத்தல்களும்,துப்பாக்கி சூடுகள் இருந்தாலும், பெரிய ரத்தக்களரி இல்லாத ரசிக்கும்படியான ஏக்‌ஷன்.

சத்யனும், ஜெயராமும் சரியாக பயன் படுத்தப்படவில்லை. ஹீரோயின், வந்துட்டுப் போறாங்க, கச்சிதமாய்.

சிரியஸ் சீனும், ஜாலி சீனும், மாத்தி மாத்தி வருவதால், அலுப்பில்லாமல் படம் போகுது. நல்ல திரைக்கதை பாணி.
கள்ளத் துப்பாக்கியும், நல்லத் துப்பாக்கியும் கொடுத்து, ரெண்டுல எத்தால சாக ஆசப்படரங்கர காட்சி, நல்ல சொறுகல்.

க்ளைமாக்ஸ் ஃபைட், தெண்டம். ஆனால், சுவாரஸ்யமான முடிச்சுகள் அங்கங்க போட்டு, நல்லா கனெக்‌ஷன் கொடுத்து, படத்தை முடிச்சிருக்காரு. வில்லனை குட்டிக் கப்பலில் இன்னாத்துக்கு கூட்டிக்கிட்டுப் போறாருன்னு தெரியலை? ஆனா, கூட்டிக்கிட்டுப் போன எடத்துல, அருமையா ரெண்டு மூணு டயலாக் சொல்லியிருந்தா, முடிவு மெருகேறியிருந்திருக்கும்.

இராணுவர்கள் செய்யும் தியாகத்தை பதியும் படி படத்தின் கடைசிக் காட்சி நெகிழ்வு.

மொத்தத்தில், துப்பாக்கி, ஜாலியான பொழுதுபோக்குப் படம். தியேட்டரில் பார்க்கலாம்.

பி.கு: இஸ்லாமியர்கள் எதிர்க்கும் அளவுக்கு, படத்தில் எந்தக் காட்சியும் இருந்ததாய் எனக்குத் தெரியல்ல. வில்லன்களின் பெயரில் தவிர. அதுக்குள்ள வெட்டிடாங்களோ?

Saturday, September 29, 2012

my kids writes to Chief Justice & Chief Minister



Dear, Respected and Honorable,
Chief Justice of Chennai High Court Thiru. M.Y. Eqbal & Chief Minister of Tamil Nadu Ms. J. Jayalalitha,
[copy to, District Collector MrThiru J. Jeyakanthan IAS ]
[copy to, Mayor Mr. S. Duraisamy]

We turned 1 year and are enjoying our life in Chennai. As you may know, as children, we have no worries and our day is typically spent in eating, playing and sleeping.
In the 1 year, we had spent most of our time indoors. We were not exposed to the Chennai outdoors, other than our trips to the doctor for regular check ups and to visit temples.
There are a few things that we have seen during our trips that were quiet disturbing and worrisome. We would like to highlight those to you and  get a quick remedy for these issues. If these things aren't fixed with your help, our future life in chennai will lack the basic quality and be filled with low standard of living, as every year pass by.

1) We saw open drainage on every road side, filled with sewage and filthy stagnant water. No wonder we were bitten by mosquitoes almost every day. The stench is very bad. We heard that  these open drainage were built to let rain water flow out into catchment areas, but people and businesses have been misusing these to let their sewage and other waste water. We are a great city filled with educated people, but when it comes to hygiene and basic cleanliness, we lag big time.

When the individual isn't ready to live with self discipline and care for surroundings, we would request eminent and powerful individuals like you to put together a strong and effective plan, to make our streets free of open drains and stench-free and livable. Please do the needful. We want fresh air and freedom from mosquitoes and illness like dengue.

2) We also noticed a scary phenomenon were most of the houses in our neighborhood and in many places in chennai, are sinking below the ground level. Its quiet puzzling to see houses that are a few feet down from the road level. We heard that the municipalities responsible for re-laying roads,  lay the roads on top of the existing roads without scraping and de-icing it first. As they do this every time, the height of the road goes higher and higher and the houses and shops on both side of the roads goes down and down.

Even though we are kids, we know that, this is not the right way to do it. We should remove the existing bad road before relaying fresh gravels and tar. This is such a basic design principle.
We have seen some houses that were  more than few steps down from the road level. During the last rain season, the houses were flooded with rain water and drainage sewage water causing major trouble for several families in many neighborhoods.

When the people  responsible to design and lay proper roads are not planning for future and lack the understanding of basic gravity, we would request eminent and powerful individuals like you to put together a strong and effective plan, to make our roads maintain its level (both in altitude and quality).

There are several other things that were equally alarming, such as encroachment of lakes and making them residentail plots illegally, dumping of waste in public places and water bodies, lack of respect to nature and trees and rain..... We will raise those to your attention, once the above two get some healing with your power.

We sincerely hope you will take the necessary steps to find a resolution at the very earliest. We thank you both for staying on top of all the other day-to-day issues and keeping our city, a better place to live.

with hope and respect,

Thank you,
Sunil Jr. & Sunil Jr.
Chromepet, Chennai


***************
sending to:
Chief Minister Ms. J Jayalalitha
Secretariat, 
Fort St.George, 
Chennai 50009

Chief Justice Thiru. M.Y.Eqbal
Chennai High Court
N fort Road, 
Parrys, George Town, 
Chennai 600104

District Collector Thiru J. Jeyakanthan IAS 
Collectorate
62, Rajaji Salai, Chennai - 600 001

Mayor Mr. S.Duraisamy
Sydenhams Rd, 
Park Town, 
Chennai  ***************

*************** *************** *************** ***************
please share and spread the word and copy/print and send similar letters, if it makes sense. Suggest, otherwise.
*************** *************** *************** ***************



pic: is saved from facebook. not sure if its related to the issue highlighted, but matches the exact pain undergone by several during rainy season.

Sunday, September 02, 2012

லைசென்ஸும் வாங்கியாச்சு, but...

அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்குள், நமக்கு ஏற்படும் எரிச்சலை, வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.
அரசாங்க வேலை செய்பவர்களில் பெரும்பான்மை, கடுக்கா சாப்பிட்டுவிட்டு வருவதுபோல், ஒரு எரிச்சலுடனேயே வேலை செய்வது போல் ஒரு தோற்றம் இருக்கிறது.
வாங்கர சம்பளம், அதுக்கு மேல கிம்பளம் எல்லாம் இருந்தும், பொறுப்பாய் வேலை செய்யாமல் தான்தோன்றித் தனமாய் வேலை செய்யும் களவாணிகளுக்கு யார்தான் மணி கட்டுவாங்கன்னு தெரியல்ல.
இணையவழியாக, அநேகம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் காலம் வந்தால்தான், இந்த லொள்ளர்களிடம் மாட்டி விழி பிதுங்காமல் இருக்க முடியும்.

சரி, பொலம்பலைக் கொறைப்போம். விஷயத்துக்கு வருவோம்.

அதாகப்பட்டது, வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்னு முடிவு பண்ணி, 'பழகுநர் உரிமம்' (LLR) எடுக்க இரண்டு மாசத்துக்கு முன் தாம்பரம் RTOவை அணுகிணேன். கூகிளார், ஏதோ ஒரு பக்கத்துக்கு இட்டுக்கினு போயி, LLRக்கு ஆன்லைன் படிவம் இருப்பதைக் காட்டி அசத்தினார்.

ஃபாரமை பூர்த்தி செய்து, சொடுக்கி, எந்த நேரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணுங்கர அளவுக்கு முன்னேறியிருந்ததை பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்.
சொடுக்கி, 10மணிக்கு வாரென்னு ஃபில் பண்ணி, பிரிண்ட் எடுத்துக்கிட்டு, தாம்பரம் RTO அலுவலகத்தை அணுகினால், "அப்பாயிண்ட்மெண்ட்டா?, போயி லைன்ல நில்லுய்யா"ன்னு, வெறுப்பாய் கத்தினார் ஆஃபீஸர் ஒருத்தர்.
அடக்கொடுமையேன்னு, என் பிரமிப்பு எல்லாம் புஸ்வாணமாகி, லைன்ல நின்னேன்.
வெயில் கொடுமை. கூரை கூட இல்லாத வெட்ட வெளியில் புழுதி பறக்கும் பெரிய லைன். கிட்டத்த 20 பேர் லைன்ல நகர்ந்து என் கட்டம் வர, ஒன்றரை மணி நேரம் ஆனது.

கவுண்ட்டரில் இருக்கும் ஆஃபீஸர், நம்மள மாதிரி சாமான்யனை கவனிப்பதற்க்குள், ஸைடில் வரும் 'கிம்பளம்' தரும் ப்ரோக்கர்கள் ஸ்பெஷல் கவனம் பெறுகிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு பணத்தை கட்டி, LLR test முடித்து, கைகட்டி பவ்யமா நின்னு, 'ஆபீஸர், எல்.எல்.ஆர் எப்ப கிட்டும்'னு கேட்டா, "போயிட்டு சாயங்கலம் வா'ன்னு அனுப்பிட்டாங்க.

சாயங்காலம் திரும்ப லொங்கு லொங்குன்னு போனா, எல்.எல்.ஆரை கொடுத்துட்டாங்க. "அப்பாடா, லஞ்சம் கொடுக்காம, எல்.எல்.ஆர்" வாங்கிட்டோம்னு உள்ளூர திருப்தி தலை தூக்க, சில பல வாரங்கள் அதை வைத்துக் கொண்டு காரில் வலம் வந்தோம்.

ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்னு, சென்ற வாரத்தில், சுபயோக' சுபதினத்தில்,  மீண்டும் ஆர்.டி.ஓ'வை நோக்கி படையெடுத்தேன்.

இம்முறை, கூட 'நைனா'வையும் கூட்டிக் கொண்டு போனது பெரும் தப்பு என்பது ஆரம்பத்திலேயே உரைத்தது. ஆனா, வேர வழியில்லை. எல்.எல்.ஆர் இருக்கும்போது, லைசென்ஸ் இருக்கர ஒருத்தரு கூட வந்தே ஆகணும்.

வழி நெடுக்க, "டேய் மவனே, ரெண்டாயிரம் ரூவாய் நம்ம தெரு ட்ரைவிங் ஸ்கூல் காரன்கிட்ட கொடுத்தா, நீ இப்படி அலைய வேணாம். வூட்டுக்கே கொண்டு வந்து லைசென்ஸ் கொடுத்துருவான். வை திஸ் தேவையில்லா அலைச்சல்?"னு கேள்வி மேல கேள்வி போட்டு தொளச்சிக்கிட்டே வந்தாரு.

ஸ்ஸ்ஸ். நம்ம கொள்கை, இயன்றவரை லஞ்சம் கொடுக்காமல் இருத்தல். அதையெல்லாம் சொன்னா, "நீ ஒருத்தன் கொடுக்காம இருந்தா வெளங்கிருமா. போடா போக்கத்தவனே"ன்னு அடுத்த அர்ச்சனை விழும்.

அதே வெட்டவெளி இடம், வெயில் பின்னி எடுக்க, ஐம்பது அறுபது பேருடன் லைனில் நின்று, கட்டணம் கட்டினேன். புழுதி பறக்கும் அந்த இடத்தில் ஒரு கூரையை போட்டு, சில நாற்காலியை வைக்கலாம்னு ஏன் நம்ம தாம்பரம் RTOக்கு தோன்றவில்லை? அம்புட்டு ஃபீஸ் வாங்கரீங்களே?
'
ஃபீஸ் கட்டியதும், நம்ம RTO inspectorஐ போய் பாத்து, "சார், நான் ரெடி, நீங்க ரெடியா, ஓட்டிக் காட்டவா?"ன்னு கேட்டேன். "இன்னிக்கு இல்ல, நாளிக்கு காலைல வாங்க"ன்னு சொல்லிட்டாரு.

ரென்டாவது நாள், திரும்ப நைனாவுடன் கிளம்பி, கரடு முரடான பாதையெல்லாம் கடந்து, ஒரு குட்டி மைதானம் இருந்த இடத்துக்குப் போனோம். நானும் பல வருஷமா பாக்கறேன், தாம்பரம்-டு-ஆர்.டி.ஓ ஆபீஸ் போகும் வழி குண்டும் குழியுமா படு கேவலமா இருக்கு. கவனிப்பார் இல்லாத வார்டா இது? ஹ்ம்.

டூ.வீலர் மக்களெல்லாம், 'எட்டு' போடும் இடம் அது. நம்ம ஆபீஸர், ஒரு திண்ணையில் ஒக்காந்து, எல்லாருக்கும், 'பாஸ்/ஃபெயில்' போட்டுக்கிட்டிருந்தார்.  ப்ரோக்கர்கள் ஒவ்வொருத்தர் பேரா கூப்பிட, மக்கள்ஸ் எட்டு போட்டுக்கிட்டே இருந்தாங்க.
அதை வேடிக்கை பார்ப்பது செம்ம டைம்-பாஸ். ஒருத்தர் எட்டுக்கு பதிலா, ஆச்சரியக் குறி போட்டு, நம்ம ஆப்பீஸரையே இடிக்கப் பார்த்தார். அவரையும், 'பாஸ்' செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.

வழக்கம்போல்,  'கடு கடு'வென காட்சியளித்த, நம்ம ஆபீஸரை அணுகி, சார், டெஸ்டுக்கு நான் ரெடி, கார் கொண்டு வந்துட்டேன், இந்தாங்க ஃபார்ம்'னு நீட்டி முழக்கினேன். ஃபார்மை வாங்கி, சரக்னு பாத்துட்டு, "pollution certificate வேணும், போயி வாங்கிட்டு அப்பரம் வாங்க. அப்பத்தான் டெஸ்ட்டு"ன்னு குண்டைத் தூக்கிப் போட்டாரு.

நமக்கு எரிச்சல் வந்தாலும், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், RTO ஆபீஸுக்கு பக்கத்தில் இந்த சர்ட்டிபிக்கேட்டை தருவதாய்ச் சொன்னார்கள். 50ரூ தண்டம் கட்டி, அதை வாங்கி, மீண்டும் ஆபீஸரை பார்த்தில், அதே கடு கடு டோனில், டூ-வீலருக்கு pollution certificate எங்கன்னாரு.
ஒரே நாள்ள நான் எப்படி சார், காரையும், டூ-வீலரையும் கொண்டு வருவேன். இன்னிக்கு கார்லதான் வந்திருக்கேன். இன்னிக்கு இத்தை கொடுங்க, நாளைக்கு டூ-வீலரோட வரேன்னேன். அதுக்கு, 'அதெல்லாம் முடியாது, போயிட்டு கொண்டு வா'ன்னாரு.

நான் கொஞ்சம் கடுப்பா, 'அப்ப கார் லைசென்ஸ் மட்டும் கொடுங்க. டூ-வீலர் வேணாம்'னேன். கடுப்பாய், 'சரி, அதை ஒரு வைட் பேப்பர்ல எழுதிக் கொடு'ன்னு சொல்லிட்டு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு, கார்-டெஸ்ட் நடத்த எஸ்கேப்பாயிட்டாரு.

அவசரவசரமா, அந்த லெட்டரை எழுதி, அவரது அசிஸ்டெண்ட்டுக்கிட்ட கொடுத்து, 'கார்-டெஸ்ட்டுக்கு எங்க போகணும்'னு கேட்டா. 'சாருக்கு பின்னாடியே போங்க. கிஷ்கிந்தா பக்கத்துலதான் எடுப்பாரு'ன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு.

நானும் காரை எடுத்துக்கிட்டு போனா, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு அப்பரம், ட்ரைவிங் ஸ்கூல் ப்ரோக்கர்கள் ஆட்களை எல்லாம் டெஸ்ட் எடுத்து முடிச்சுட்டு அந்த் எடத்துக்கு வந்தாரு. 'சார், நான் ரெடி. நீங்க ரெடியா?. டெஸ்ட் எடுத்துடலாமா?'ன்னு கேட்டேன்.

அதே வெறுப்புடன், 'எங்க உன் காரு. போயி ஒக்காந்து இங்க வந்து நிப்பாட்டுன்னாரு'. நான் ஓடிப்போயி, கார்ல் ஒக்காந்து விஷுக்னு அவரு நின்ன எடத்துக்கு வந்து நிப்பாட்டினேன். அதுக்குள்ள, அவரு இன்னொரு ட்ரைவிங் ஸ்கூல் காருக்குள் ஒக்காந்துட்டாரு. நான் ஓட்டினதை பாத்தாருன்னு கூட தெரியல்ல. "சரி சரி, ஆஃபீஸ்ல போயி வெயிட் பண்ணு. நான் வந்துடறேன்'னு போயிட்டாரு.
(இவர் படுத்தியதை பார்த்ததில், ஈசன் படத்துல வர மினிஸ்ட்டர் லுங்கிய கட்டிக்கிட்டு மதியானம் படுத்துத் தூங்கர காட்சி நினைவில் வந்தது.)

குழப்பத்தில், நானும் ஆபீஸ்க்கு போயி, மூணு மணி நேரம் வெயிட்டினேன். எல்லாரும், சூடான பிரியாணி பொட்டளம் லஞ்சுக்கு (ப்ரோக்கர்கள் உபயம்) பிரிச்சு மேய, மொத்த ஆபீஸும் பிரியாணி வாசம் கம கமக்க, நான் பசியோட, எங்கப் போயி தொலஞ்சாரு இந்த ஆளு என்ற கணக்கில் வெயிட்டிக் கொண்டிருந்தேன்.

மேலும் இரண்டு மணி நேரம் ஆனதும், பொறுமை போனது. இவரைக் காணும். மற்ற ஆபீசர்களிடம் விசாரித்தால், பொறுப்பாய் ஒரு பயலும் பதிலைச் சொல்லவில்லை. அவரு FC (fitness certificate) கொடுக்க வேற ஒரு எடத்துக்கு போயிருப்பாருன்னு சொன்னாங்க.

என்னை வெயிட் பண்ணச் சொல்லிட்டு, இவரு இஷ்டத்துக்கு இப்படியா சுத்தரதுன்னு செம கடுப்பு எனக்கு. இருந்தாலும் FC போடும் இடத்துக்கும் RTO ஆபீஸுக்கும் அலைந்து திரிந்ததில் அந்த ஆபீஸரை காணவே காணும்.

வெறுப்பு அதிகமாக, மேலாளரைப் பாக்கணும்னு கேட்டா, மேலாளரும் அன்னிக்கு வரலைன்னு சொன்னாங்க. ஸ்ஸ்ஸ். இன்னொரு ஆபீஸரிடம், "காலைலேருந்து காஞ்சுக்கிட்டு இருக்கேன். டெஸ்ட் முடிச்சாச்சு. நீங்க கையெழுத்து போட்டா, நான் ஃபோட்டொ எடுத்துட்டு லைசென்ச் வாங்கிட்டுப் போயிடுவேன். இனிமேலேயும் வெயிட் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டேன். அவரும் மற்றவர்களைப் போல், அவர் வந்துடுவாருன்னு டபாய்க்க, "சந்தைக்குப் போவணும் ஆத்தா வையும் காசு கொடு" ஸ்டைலில், நான் கேட்டதையே கேட்டுக் கொண்டிருக்க,  அவரும், வேண்டா வெறுப்பாய் கையெழுத்தைப் போட, ஓடோடிச் சென்று லைசென்ஸுக்கான புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை வரச் சொன்னார்கள், லைசென்ஸ் பெற்றுக் கொள்ள.

மீண்டும் நைனாவுடன், காலங்காத்தால போயி நின்னா, சூப்பரிண்டண்டன்ட் இல்லை, சாயங்காலமா வாங்கன்னாங்க.
எல்லாத்துக்கும் துணிஞ்சு, ஒரு 'நிர்வாணா' நிலையில் இருந்ததால், எரிச்சல் பெருசாய் எழவில்லை. சிரிச்சுக்கிட்டே, "எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்டா'ங்கர மாதிரி, மீண்டும் சாயங்காலம் போயி, ஒரு வழியா லைசென்ஸ வாங்கிட்டேன்.

ப்ரோக்கர் மூலமாய் போனால், கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய், ஒரு லைசென்ஸ் பெற. கண்டிப்பாய், சிலப் பல ஆயிரங்கள், இதில் கிம்பளமாய் போக 99% வாய்ப்பிருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 பேர் லைசென்ஸ் வாங்கராங்க. நீங்களே, கணக்கு போட்டு பாத்துக்கங்க.
இப்படி சுலபமாய் வரும் கிம்பளத்தை இழக்க விரும்பாததால், டைரெக்ட்டாய் ப்ரோக்கர் (ட்ரைவிங் ஸ்கூல்) இல்லாமல்  வரும் என்னனைப் போன்றவர்களை, வாட்டி எடுக்கிறார்கள் RTO மக்கள், என்பது அடியேனின் ஆணித்தரமான கருத்து.

same-day ப்ராசஸிங் செய்து, அன்றே கொடுக்கப்பட வேண்டிய லைசென்ஸ், நாலு நாட்கள் அலைந்து திருந்த பின்னர், ஏகப்பட்ட நேர விரையம், பெட்ரோல் செலவு, பல மன உளைச்சல்களுக்கும் ஆளான பின்னர், மட்டுமே பெற முடியும், கிம்பளம் கொடுக்க விரும்பாதவர்கள்.


தாம்பரம் RTO கவனிக்க:
பெரிய பதவியில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் மட்டுமே, அழுகிப் போயிருக்கும், அரசு அலுவல்கள், திறம் பெற நடக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆவன செய்க, உடனே!

கொசுறுச் செய்தி: கடுப்பேற்றிய ஆபீசர், சமீபத்தில் Zion பள்ளிப் பேருந்து  FC விவகாரத்தில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வந்தவர் என அரசல் புரசலாய் காதில் விழுந்தது. கிர்ர்ர்ர். திருந்தித் தொலைங்க சார்களா.


 

Tuesday, August 21, 2012

Letter to the TN government officials

The CM's Special Cell, at http://cmcell.tn.gov.in/menu1.php seems to function well.

Grievance are stored and followed upon, i am told.
Trying my luck with the following grievance. will keep you posted on progress. 

------------------------ ------------------------
Dear Government officials,

We have a beautiful lake in Chitlapakkam, which has helped maintain ground water levels all these years.
lately, its shores are being encroached by other govt deparments for dumping and burning waste.
such a pristine lake should be preserved and nurtured. i request our governments environment wing to take initiative to protect and improve the lake and its surroundings.

If we increase the depth of the lake, clear the encroachers and build a pathway around the edges, it can become a beautiful destination for the general public and will serve as a excellent showcase for years to come, on how government can change the environment in a positive way.

Rain water harvesting was a big success, since the government initiated it and enforced it relentlessly.
such a courageous stature should be taken to save our natural resources, such as the chitlapakkam lake.

looking forward to hear from you. I can help coordinate and do whatever is needed to help make progress

------------------------ ------------------------
ref: 2012/701285/CY

chitlapakkam lake:

Wednesday, June 20, 2012

அமாடியஸ்ஸின் க்ளைமாக்ஸ்


மோசார்ட் என்ற இசை மேதையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்த படம் அமாடியஸ். (Amadeus).
சீரியஸா இல்லாம,, கொஞ்சம் காமெடியாக செல்லும் திரைக்கதை.

எட்டு வயதிலேயே, தன் இசைத் திறமையால், பலரை வியப்பில் ஆற்றியவர் மொசார்ட். இள வயதிலேயே அவருக்குக் கிட்டிய புகழைக் கண்டு பொறாமையில் செலியேரி (Selieri) என்ற இன்னொரு அரசவை இசை மேதை, மொசார்ட்டை எப்படிக் கொல்ல முயன்றார் என்பதைப் போன்ற கதைக் கரு.

அரசவையில் தனக்கு இருந்த புகழ், மொசார்ட்டின் வருகைக்கு பிறகு குறைந்ததை தாங்க முடியாமல் இருக்கிறார் செலியேரி.
மொசார்ட்டின் ஏழ்மையை அறிந்த செலியேரி, மாறு வேடத்தில் சென்று, மொசார்ட்டிடம் ஒரு பெரிய இசைக் கோர்வையை எழுதித் தரச் சொல்லி பணம் தருகிறார்.
தினசரி இரவு வந்து, சீக்கிரம் முடித்துத் தருமாறு நெருக்கடி தருகிறார். நெருக்கடி அதிகமாகி, மொசார்ட் உடல்நலம் குன்றி, கடைசியில் இறந்தும் போகிறார்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இது. உடல்நலம் குன்றிய மொசார்ட், ஒரு தருணத்தில், செலியேரிதான் வில்லன் என்பது புரியாமல், செலியேரியிடம், தான் எழுதி முடிக்க வேண்டிய இசைக் கோர்வையை, எழுதித் தருமாறு சொல்கிறார்.
மொசார்ட், சொல்லச் சொல்ல, செலியேரி அதை புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதும், புரிந்ததும், மொசார்ட்டின் திறமையை உள்வாங்கி பொறாமைப் படுவதும், பின்னணியில் மொசார்ட் சொல்லும் இசை வாசிக்கப்படுவதும், இந்தக் காட்சியை எங்கேயோ இட்டுச் சொல்லும் (Selieri played by Murray Abraham, won the Oscar for Best Actor). எட்டு ஆஸ்கார் விருதை வாங்கிய Amadeus, பார்த்தே ஆக வேண்டிய படம், இசைப் பிரியர்கள் அனைவரும்.




Salutes, to the Maestro and the film maker.


பி.கு: நம்ம ஊரு ராசாவும், கமலும் விரும்பிப் பலமுறை பார்த்த படம் அமாடியஸ், என்பது கொசுறுச் செய்தி.



Monday, April 02, 2012

சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்

முன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.

வேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல்  ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.

நானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.

அண்ணி  எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.
"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.

வேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.
"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்"னு சென்ற முறை சொன்னார். 
பணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து  குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். "தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா" என்று பேச ஆரம்பித்தார்.
அநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.
மேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.

முக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம்.   வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க,  கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.

இரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.

சுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.
இதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.
இவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வேலை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

"இப்ப எல்லாம் ஓ.கே தானே"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.
"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா,  வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு?"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
ஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு. 

"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.

"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.

அவரை இடை மறித்து, "பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..

"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி" என்று சொல்லியவாறு  சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.

லஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.

நெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்?

அடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா?
வெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ?

ச! கம்மனாட்டிக்கள்!

Tuesday, February 28, 2012

லக்கிலுக் -aka- யுவகிருஷ்ணாவின் டாப் 5 பதிவுகள்

பொழுதுபோகவில்லை என்றால், டமில்சினிமா.கொம்'க்கு  அடுத்த படியாய், நான் ப்ரவுசரில் தட்டுவது luckylookonline.com என்ற உரலைத் தான். அப்பாலிக்கா, தினகரன், csm-fanaa.blogspot.com, thehindu.com, ndtv.com, news.google.com என பட்டியல் இருக்கும்.

லக்கிலுக் (யுவகிருஷ்ணா) சுவாரஸ்யமான விஷயங்களை, சுவாரஸ்யமாக எழுதுவதில் தேர்ந்தவர். பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டுமல்லாமல், புதிய தலைமுறைக்காக எழுதப்படும் நல்ல கருத்துக்களும், மாறி மாறி வருவது, அவர் பக்கத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அப்படியே தக்க வைத்துள்ளது. எப்ப உரலைத் தட்டினாலும், ஏதாவது புதிய மேட்டர் மினிமம் கேரண்ட்டியுடன் வாசிப்புக்கு ரெடியாக இருக்கும்.

ப்ளாகர் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் டாப்பு பதிவுகளை கண்டறியலாம் என்று பதிந்தபோது, அவரின் டாப்பு 5 பதிவுகளாய் இவற்றைத் தெரிவித்திருந்தார். 1/5 விகிதாச்சாரத்தில், கில்ஃபான்ஸும், நல்ல மேட்டரும் டாப்பில் இருப்பது அவர் பிழையல்ல, அது நமது மன வக்கிரத்தின், அளவுகோல் :)

லக்கி, படிப்படியா, எங்கேயோ போயிக்கிட்டு இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.

சவிதா அண்ணி!
Aug 27, 2009, 32 comments
43,419 Pageviews

நடுநிசி நாய்கள்!
Feb 19, 2011, 53 comments
12,447 Pageviews

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
Sep 5, 2011, 77 comments
11,404 Pageviews

ஷகீலா
Jul 25, 2009, 6 comments
7,910 Pageviews

சரோஜா தேவி!
Jan 1, 2011, 51 comments
5,745 Pageviews

Monday, February 20, 2012

சென்னையின் விலைவாசி ஷாக்

எல்.கே.ஜி முதல், கல்லூரிப் படிப்பு வரை படிச்சு கிழிச்சு தொயச்சு ஆறப்போட்டது சென்னையில்தான்.
ஆணி பிடுங்க ஆரம்பிச்சதும் கூட  சென்னையில் தான்.
பெரிய வசதி வாய்ப்பில்லன்னால்லும், குடும்ப கஷ்ட நஷ்டங்களெல்லாம் தெரியாம, 'சுகவாசி'யாத்தான் வாழ்ந்து பழகியிருந்தேன்.
ஆனா, 'பாக்கெட்டு' மணியெல்லாம் வைத்திருந்ததில்லை.

சைக்களில் காத்து போச்சுன்னா, அடிக்கரதுக்கு, எட்டணாவும், வெயில் காலத்துல மயக்கம் வந்தா ஜோடா வாங்கிக் குடிக்க பழைய ரெண்டு ரூபாவும் மட்டுமே கையில் இருக்கும். பஸ்ஸுக்கும் ரயிலுக்கும், மாதாந்திரப் பாஸு/டோக்கன் மட்டுமே.

தம்ஸ்-அப்பு, நாயர் கடை டீ, பட்ஸ் பாவ் பஜ்ஜி, ஸெட் தோசையெல்லாம் வாங்கிக் கொடுக்க, நட்பு வட்டாரம் பெருசா இருந்தது.
வூட்டுக்கு தெரியாம, டாட்டா சியெரா காரு வாங்கர அளவுக்கு, பசையான பயலுவ கும்பலில் இருந்தார்கள்.

ஊரில் இருந்தவரை, ஒரு ரூபாய்க்கு டீயும், ரெண்டு ரூபாய்க்கு ஸ்பெஷல் டீயும், ஏழு ரூவாய்க்கு தாம்பரம் பட்ஸில் பாவ் பஜ்ஜியும், பத்து ரூவாய்க்கு பரோட்டா சால்னாவும் கிட்டியதாய் ஞாபகம். அன்லிமிட்டட் மீல்ஸ் கூட முப்பது ரூபாய் இருந்திருக்கும்.
இது தொண்ணூறுகளின் நடுவில்.

முதல் வேலை கிட்டியதும், பயலுவளை, தாம்பரம் பட்ஸுக்கு கூட்டிக் கொண்டு போய், அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி கொடுத்து, கடமையை ஆற்றினேன்.

சிங்கப்பூரில் வேலை கிட்டியதும், அந்த வருட விடுமுறையில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் குட்டி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போய், பஃபே வாங்கிக் கொடுத்து கடமையை ஆற்றினேன். ஒரு ஆளுக்கு, நூறு ரூபா கிட்ட இருந்தது. அதுக்கு துட்டை அழும்போதே, இவ்ளோ போதான்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு. இருந்தாலும், கடமை முக்கியமாச்சேன்னு எடுத்து வுட்டேன்.

அமெரிக்கா வந்ததும், ஒவ்வொரு வருட விடுமுறையில் நட்பு வட்டாரத்தை இட்டுச் செல்லும் இடத்திற்கு, "நட்சத்திரம்" ஏறிக் கொண்டே போனது. 2 ஸ்டார், 3 ஸ்டார் ஆகி, 3 ஸ்டார், 4 ஸ்டார் ஆகி, ஆகி, இப்ப ஏழு ஸ்டாரில் வந்து நிக்குது. ஐநூறு ரூபாய்க்கு முடிந்த கடமை ஆற்றல், இப்பெல்லாம் சில பல ஆயிரங்கள் ஆவுது.

விடுமுறையின் போது, இருக்கும் மூணு நாலு வாரத்தில், அதிகமாய் மற்ற விஷயங்களை அலசி ஆராய நேரம் இருக்காது. விலைவாசியெல்லாம் ஏறுதுன்னு  படிப்பதோடு சரி. எங்க போனாலும், ஆட்டோக்காரனும், கால் டாக்ஸி காரனும், ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கிட்டு, மிச்சம் தரலாமா வேணாமான்னு யோசிக்கர அளவுக்கு, பெட்ரோல் விலை ஏற்றம் ஆனது தெரிந்திருந்தது.

ஆனா, சிங்கிள் டீ, இன்னும் ஒரு ரூபாயாத்தான் இருக்கும், பஸ்ஸுக்கு குறைஞ்ச கட்டணம் இன்னும் எட்டணாவாத்தான் இருக்கும், உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை. வேற யாராவது உடன் இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலை அவங்க பாத்துப்பாங்க என்பதால் அப்படி.

சென்ற விடுமுறையின் போது, குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயிட்டு, நான் தங்க்ஸ் மட்டும் தனியா சென்னைக்கு வர, மத்தவங்களெல்லாம் வேறு சில ஊர்களுக்கு விசிட் முடிச்சிட்டு சென்னைக்கு வரதா ப்ளான்.
வீட்டுக்கு வந்ததும் அகோரப் பசி. சமையல் எல்லாம் பண்ண நேரம் பத்தாது, பக்கத்துல தான் செட்டிநாடு உணவகம் ஒண்ணு இருக்கு, போயி எத்தையாவது வாங்கிட்டு வந்துடுன்னு தங்க்ஸ் சொன்னதைக் கேட்டதும், பைக்கை உதைத்து ஸ்டார்ட்டி விட்டு, உணவகம் வந்தடைந்தேன்.
ரெண்டு பேருக்கு, இரு நூறு ரூபாய் போதும்னு, கையில ரெண்டு நூறை எடுத்டு ஜோபீல போட்டுட்டு இந்தப் புறப்பாடு.

செட்டிநாட்டாரிடம் மெனுவை வாங்கி ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன். நல்ல ஒரு பெப்பர் சிக்கனும், ஒரு பிரியாணியும், சால்னாவும், நாலு பரோட்டாவும் வாங்கிக்கிட்டா திவ்யமா கொண்டு போயி சாப்பிட்டா பிரமாதமா இருக்குமேன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே, மெனுவை மேஞ்சு, ஆர்டன் பண்ணேன். நாணூத்தி சொச்சம் கொடுங்க சாருன்னு சொன்னான்.

திடுக்னு ஆயிருச்சு. 'பட்ஸ்' கணக்கு போட்டா, கிட்டத்தட்ட 120க்குள்ள வரும்னு நெனச்சிருந்த எனக்கு, நாணூறைக் கேட்டதும், தூக்கி வாரிப் போட்டுருச்சு.
மெனுவை வாங்கி விலையைப் பாத்தா, ஒரு பிரியாணி 160ரூ, ஒரு பரோட்டா 18ரூ, ஒரு பெப்பர் சிக்கன் 140ரூன்னு போட்டிருந்தான்.

18ரூ கொடுத்து ஒரு பரோட்டாவோ, 140 ரூ கொடுத்து தம்தூண்டு பெப்பர் சிக்கனோ வாங்க மனசும் வரலை, கையில் காசும் பத்தலை.

"ஓ, யூ நோ வாட். வெஜிடேரியன் டிஷ்ஷு என்னா இருக்கு?"ன்னு கேட்டு, காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு போய் அன்றைய தினத்தை ஓட்டினேன்.
வழி நெடுக்க ஒரு திக் பிரமைதான். ஊருல என்ன நடக்குது? மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்சு ரூவாய் இருக்க வேண்டிய பரோட்டா, தாறு மாறா விலை ஏறிப் போயிருக்கே. எப்படி எல்லாருக்கும் கட்டுப்படி ஆகுது? அம்புட்டு விலை ஏற, அதுவும் ஏழு ஸ்டாரெல்லாம் இல்லை, சாதாரண உணவு விடுதிதான்.

நமக்குத்தான் பயக்கம் இல்லாததால கிலி ஆயிடுச்சா?
உள்ளூர் காரனெல்லாம், லெஃப்ட்டு கை கொடுக்கரதை, ரைட்டு கைக்கு தெரியாத அளவுக்கு விசுக் விசுக்னு எடுத்து தண்ணியா செலவு பண்றானாமே? ஐநூறு ரூவா நோட்டுக்கெல்லாம், ப்த்து ரூபா மாதிரிதான் மரியாதையாமே?
எங்கே செல்லும் இந்தப் பாதை..?


இஸ் இட்? ஹ்ம்!

Sunday, February 05, 2012

நாசர், ராசா பற்றி, ராசா, நாசர் பற்றி


இங்கு பதிந்ததன், ஒளிப்பதிவு கீழே.

நாசர் , ராசா பற்றி.





ராசா, நாசர் பற்றியும், மேலும் பலவற்றைப் பற்றியும், அட்டகாசமாய்...



Thursday, February 02, 2012

உங்களின் டாப்பு 5 பதிவுகள்?

ப்ளாகரில் பதிவு வைத்திருப்பவர்கள் அவர்களின் பதிவுகளை எத்தனை பேர் படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க, Blogger.com பக்கத்துக்கு போயி, Stats பாத்தா தெரிஞ்சுக்கலாம்.


http://www.blogger.com/blogger.g?blogID=9999999999#overviewstats
(9999999999 பதிலா,, உங்க blog Id போட்டுக்கங்க)

Stats பக்கத்துக்கு போயி, 'All Time''னு பாத்தீங்கன்னா,, உங்கள் பதிவுகளின் டாப்பு அஞ்சு எதுன்னு காட்டும்.

2009க்கு முன்னாடி எழுதின பதிவுகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

நான் எழுதிக் கிழிச்சதுல, டாப்பு 5 இதுதானாம்.

எ..கொ.இ?

ரூம் போட்டு யோசிச்சு எழுதரதெல்லாம் லிஸ்ட்டுல காணும்.
கண்ண மூடிக்கிட்டு போடர மொக்கைகள் தான் எல்லாரையும் இஸ்க்குது.

வாசகர்களின் பல்ஸை புடிச்சுட்டேன், இனி எல்லாம் மொக்கையே :)

உங்க டாப்பு 5 எது?




Tuesday, January 31, 2012

GOOGLE செய்யும் சதி?

இந்திய அரசாங்கம், கூகிளாரையும், முகபுத்தகத்தாரையும், யாஹூவர்களையும் கூப்பிட்டு மிரட்டி அனுப்பியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நம் ஊருக்கு ஒவ்வாத contentஐ சென்ஸார் செய்ய வேண்டும் என்ற மிரட்டல் அது.

ஓ.சில கெடைக்குது, அனானி பெயரும் இருக்குன்னு, பலரும் ஃப்ரீயா, பலப் பல கருத்துக்களை அள்ளி வீசிக்கிட்டு வரோம். சில, அரசாங்கத்துக்கும், கட்சி நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வாத விஷயமாய் அமைந்துவிடுகிறது.

Google.com போனால், உங்க ஊருக்கு ஏத்த மாதிரி, Google.in, Google.sg போன்ற தளங்களுக்கு தானாய் ரீ-டைரக்ட்டு ஆகும். அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி personalized content கொடுப்பதற்க்கு ஏதுவாய் இருந்தது இம்முறை.

ஆனா, blogspot.com சமீபத்தில் blogspot.inக்கு ரீ-டைரக்ட்டு செய்யப்படுவதாய் செவிவழி செய்தி வந்தது.

google.com, google.inக்கு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அமெரிக்காகாரன் super starனு தேடினா Clint East Wood பற்றிய பக்கங்களையும், அமெரிக்கா அல்லாத மற்ற எந்த நாட்டுக்காரன் தேடினாலும், தலீவரு பற்றிய பக்கங்களையும் கட்டம் கட்டி காட்ட ஏதுவாய் இருக்கும். அதை தவிற, அந்தந்த ஊரின், மொழிகள், கலரு காம்பினேஷன்களெல்லாம் போட்டு பக்கத்தை காட்டலாம்.

ஆனா, blogspot.com ஏன் அப்படி உறுமாற்றப்படணும்? surveysan.blogspot.com எந்த ஊரிலிருந்து பாத்தாலும், நான் சொல்ல நினைப்பது ஒரே செய்திதானே? நான் காட்டும் கலரும், மொழியும், டிசைனும் தானே என் வாசகர்கள் பாக்கணும்னு நான் முடிவு பண்ணியிருக்கேன்?
அப்படி இருக்க, blogspot.com ஏன் blogspot.in, blogspot.sg என்று ஊருக்கு ஏத்த மாதிரி, ஒரே விஷயத்தை காட்டணும்?

இது எதுல போயி முடியும்?
அந்தந்த ஊரின் பக்கங்களில், அந்தந்த அரசாங்கத்துக்கு வேண்டாத contentஐ சுலபமா சென்ஸார் செஞ்சிட முடியும்னு தோணுது.

சோனியா, மன்மோகர்களின் விருப்பம் நிறைவேற்ற முதல் படி போலருக்கே?

அட நாராயணா!

.com, .in ஆனால், பதிவு எழுதும் நல்லுலகத்துக்கு பெரிய தொல்லைகள் உருவாகும். திரட்டிகளில் இணைத்தலும் சிக்கலாகும்..

.inக்கு மாறாமல் இருக்க, இதை முயன்று பாருங்கள். உங்களின் பக்க உரலுக்கு கடைசியில் /ncr என்று சேர்த்துப் பாருங்கள்.

இப்படி: http://surveysan.blogspot.com/ncr

மேல் விவரம் அறிந்தவர்கள் பகிருங்கள். நன்றீஸ்.


Monday, January 30, 2012

அப்பாடக்கர் - குறும்படம்

இளா இயக்கத்தில்,   தேவ்  வசனத்தில்,  பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன் நடிப்பில் அட்டகாசமாய் வந்திருக்கிறான் அப்பாடக்கர்.

நேர்த்தியான மேக்கிங். காட்சிக்கேற்ற இசை. விறுவிறுப்பு குறையாத திரைக்கதை. மொத்தத்தில் அருமை.



இளையராஜா ரசிகர்களுக்காக

ஜெயா டிவியில் இளையராஜாவின் 'என்றென்றும் ராஜா' பார்த்ததிலிருந்து, தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் சிலுப்பி எழுந்த கதையா, ராஜா ராஜா ராஜான்னு, அவரின் பாடல்களையும், அவரைப் பற்றிய செய்திகளையும் அசை போட்டபடி இருந்தேன்.

அப்பொழுது கண்ணில் பட்ட இந்த பதிவுகள், இளையராஜாவின் ரசிகர்கள் கண்டிப்பாய் படித்து, பார்த்து, இன்புற வேண்டியவை என்று இங்கு லிங்க்குகிறேன்.

படித்து இன்புறுங்கள்.
source: DG Arts

1) கோபிநாத்தின் - என்றென்றும் ராஜா - ஆசீர்வதிக்கப்பட்டவன்
ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து சிலாகித்து எழுதியிருக்கும் விதம் ரொம்ப அழகு.

2) இளா பதிவில் - "தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !
நாசருக்கு, அவதாரம் படத்தில் வரும் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை ராஜா இசை அமைத்து கொடுத்த கதை. சிம்ப்ளீ சூப்பர்ப். ராஜா ரசிகனுக்கு, புல்லரிக்கும், கண்ணில் நீர் சுரக்கும். ஸ்ஸ்ஸ்ஸ். அடேங்கப்பா. ராஜா ராஜாதான்!!!!

அவரின் தனிப் பட்ட குணம், குறை, நிறைகளை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், இளையராஜா நம் சமூகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்ப்ரசாதம்.
வாழ்க வளர்க. What a Genius he is!

Sunday, January 29, 2012

சென்னையில் இளையராஜா

அநேகம் மேடைக் கச்சேரிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்தில் சென்னையில் அரங்கேறிய இளையராஜாவின் இசை ராஜாங்கம் போல் எதுவும் கண்டதில்லை.

source: DG's Art Gallery
நேரில் பார்க்கமுடியாவிட்டாலும், ஜெயாடிவியில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியை யூ.ட்யூபில் பலப்பல முறை பார்த்து அனுபவித்து சிலாகித்து மெய்சிலிர்த்து உடல் பூரித்து ஆனந்தத்தில் திளைத்து பிறந்த பயன் அடைந்த ஃபீலிங்கில் உறைந்து போய் கிடக்கிறேன் சில நாட்களாய்.

பள்ளிக் கல்லூரிக் காலங்களில் வாழ்வின் ஒவ்வொரு அத்யாயத்திலும் உடன் பயணித்ததாலோ என்னமோ, ராஜா பாட்டைக் கேட்டால் மனதில் எழும் ஒரு துள்ளல் வேறு பாடல்களில் கிடைப்பதில்லை.

கிட்டார் படிக்க விரும்பிய நாட்களில், 'Zen Guitar' என்று ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. கிட்டார் எப்படி வாசிப்பது என்றெல்லாம் அதில் சொல்லித் தரவில்லை. ஆனால், ஒரு கலையை கற்றுக் கொள்ள எப்படி அணுகுமுறை இருக்கவேண்டும்னு அழகா சொல்லியிருந்தாங்க அந்த புக்குல. கண்ட கிட்டாரையும் 'சீப்பா' கிடைக்குதேன்னு வாங்கக் கூடாதாம். ஓரளவுக்கு விலை  கொடுத்தாலும், சிறந்த நேர்த்தியான படைப்பாளியின் கையால் செய்யப்பட்ட தரமான கிட்டாரையே வாங்க வேண்டுமாம். ஏன்னா, அநத கிட்டாரை செய்கையில் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி அந்த உன்னதமான படைப்பாளியின் அக்கரையான உருவாக்கத்தில் உருவாகி, அந்த கிட்டாரின் உடனேயே பயணிக்குமாம். அப்பேர்பட்ட கிட்டாரை கையில் எடுத்து வாசித்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரியாம்..

ராஜாவின் ஒவ்வொரு படைப்பிலும், அவரின் இசைத் திறமையை விட இசையின் மேல் அவருக்கு இருக்கும் பற்று, பாஸிட்டிவ் எனர்ஜியை பாய்ச்சி பாய்ச்சி நம்மை இன்றளவிலும் கேட்கும்போது கிறங்க அடிக்கிறது.

ராஜாவின் சமீபத்திய மேடை நிகழ்ச்சியை பாக்காதவங்க, காலம் தாமதம் செய்யாமல், உடனே பாருங்க. ஜென்ம சாபல்யம் கிட்டும்.

இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய பலம், பாடல்களின் தேர்வு.

ரசிகனை குஷியாக்கறேன் என்ற பெயரில், 'சொர்கமே என்றாலும்..' போன்ற டான்ஸு நம்பரை நம்பாமல், ஒவ்வொரு ரசிகனும் ஏன் இன்னும் ராஜாவை தலையில் வைத்துத் தாங்குகிறான் என்ற பல்ஸை உணர்ந்த பாடல்களின் வரிசை.

ஐம்பது வயலனிஸ்ட்டுகள், அஞ்சு செலோ, ரெண்டு மூணு ட்ரம்மர்ஸ், மூணு நாலு பியானோ, ஃப்ளூட்டுடன் அருள்மொழி, கண்டக்டர் புருஷோத்தமன், டாப் க்ளாஸ் கோரஸ் பாடகர்கள், ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என மேடை வியக்க வைத்தது.
தொகுப்பாளராக ப்ரகாஷ்ராஜ்.
பார்வையாளர்கள் வரிசையில் பாலுமகேந்திரா, பால முரளி கிருஷ்ணா போன்ற மகானுபாவுலுக்கள்.

இசை நிகழ்ச்சியை பாத்து ரசிச்சு புளகாங்கிதம் அடஞ்சுக்கோங்க. கிட்டத்தட்ட நாலு மணி நேர நிகழ்ச்சி. ரெண்டு மூணு தபா பார்க்கத் தூண்டும்.

ஆணி பிடுங்குவதில் பிசியாக இருப்பவராயின், உங்களுக்காக,, சில டிட்.பிட்ஸை கீழே அடுக்கியுள்ளேன். கண்டிப்பாய் காண்க.

- ஆரம்ப ஜனனி ஜனனி
- அம்மா பாட்டுடன் யேசுதாஸ் துவங்கினாலும், SPBயின் அம்மா பாட்டு டாப்பு.
- புத்தம் புதுக் காலையின் இசைக் கோர்வையை கேளுங்கள்
- பருவமே பாடல் பிறந்த கதையும் பாடலும்
-  Zupertனு ஏதோ ஒரு பெருந்தகையின் சிம்ஃபொனி இசையை வாசித்து அதன் தாக்கம் 'இதயம் போகுதே' பாடலில் வந்த கதை
- ஏதோ மோகம் ஏதோ தாகம், இசைக் கோர்வை
- பூங்கதவே தாழ்திறவாய் வயலின் பிட்டு
- எளங்காத்து வீசுதேயில் அருள்மொழியின் ஃப்ளூட்டு
- பூவே செம்பூவே இசை
- நான் தேடும் செவ்வந்தைப் பூவிது
- யேசுதாஸ், SPB medley
- evergreen இளமை இதோ இதோ

ராஜா, எப்பவும் அவரு ராஜா!

Scintillating show! Salute!




Friday, January 27, 2012

நண்பன் - திரைப்பார்வை

மிஷன் இம்பாஸிபிள், பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 'நண்பன்' படத்திற்க்கு காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு போலாம்னு போனது வீண் போகலை.
காதலுக்கு மரியாதை காலங்களில் இருந்தே விஜய் ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த விஜய் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, நண்பனில். கூடவே, நம்ம ஊரு ஸ்ரீகாந்தும், ஜீவாவும்.

இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா), அவர்களின் கல்லூரி முதல்வரும் (சத்யராஜ்), முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (சத்யன்) சேர்ந்து கலக்கும் படம் நண்பன்.

இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, நண்பன் பார்க்கும்போதும். நண்பன் நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.

கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், விஜய் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, விஜய் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.

ஜென்ட்டில்மேன் புகழ் ஷங்கரின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.

அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?

மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?

படத்துக்கு வருவோம்.

திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.

படத்தில், விஜய் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், விஜய் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் சத்யராஜ் கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.

இலியானா, பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க. ஸ்ரீகாந்த், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, சத்யன். ஸைலன்ஸர் என்ற மாணவனாக வராரு இவரு. தமிழ் படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். விஜய்'யை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை விஜய் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.

விஜய் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, இலியானாவின் அக்காவுக்கு, விஜய் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், விஜய் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. விஜயின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.

ஊட்டியில் படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.

படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.

பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.

டிஸ்கி: 2009ல் எழுதிய 3 Idiots விமர்சனததை, நடிகர்கள் பெயர் மட்டும் மாற்றி, அப்படியே எழுதியது. படமும் அச்சு அசலா அப்படியே எடுத்திருக்காரு ஷங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  ஆனா, கூட்டாம குறைக்காம, அழகா கொடுத்திருக்காரு படத்தை. இதை எடுத்ததுக்கே அவருக்கு ராஜமரியாதை கொடுக்கணும்.
விஜய்யை வைத்து எடுக்கலாம் என்று 2009லேயே நான் ஆருடம் சொன்னதை எண்ணி ரொம்பவே புல்லரிக்குது போங்க. ஷங்கருக்கே ஐடியா கொடுக்குமளவுக்கு யாம் வளர்ந்திருப்பது மெத்த மகிழிச்சியாய் இருக்கிறது. ஹீ ஹீ ஹீ. அடிக்க வராதீங்க, மீ த எஸ்கேப் ;)
ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கலாம்.

Wednesday, January 25, 2012

டமில்சினிமா ஆர்.எஸ்.அந்தணன் அவர்களுக்கு...

இணையத்தில் புழங்கும் உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான இணைய தளங்களில் ஒன்று tamilcinema.com.

ஊரை விட்டு வந்த பிறகு, சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கும், ஆரம்ப காலங்களில், குமுதம்களும், விகடன்களும், தினகரன்களும் கை கொடுத்து வந்தன.. ஆனால், சில பல வருடங்களில், குமுதமும், விகடனும், சந்தா வசூலிக்க ஆரம்பித்து எமது பொழுது போக்கில் மண்ணை வாரிப் போட்டிருந்தார்கள்.

ஓசியில் கொடுத்தால்  ஃபினாயிலையும் குடிப்போம். 
ஆனா, ஒத்த ரூவா கேட்டா கூட, அமிர்தத்தையும் 'ஐயே கசக்கும்'னு ஓரம் கட்டும் வீரப் பாரம்பர்யம் நம்முளுது.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் tamilcinema.com தான் சகலரின் பொழுதுபோக்காக இருந்தது. google.com போறோமோ இல்லியோ, மத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு கண்ணு சொறுகி மந்தமாகும் போது, tamilcinema.com பக்கத்துக்கு போயி, கிசு கிசு படிச்சு, ப்ரேக் ரூமில் போய் அலசி ஆராஞ்சாதான் அன்னிக்கு நாள் நகந்த மாதிரி இருக்கும்.

யாரு, யாரு படத்துல நடிக்கப்போறா, யாருக்கு யாரோட லடாய், சுட சுட விமர்சனங்கள்னு பக்கங்கள் களை கட்டும்.
களை கட்டுவதோடு இல்லாமல், தளமும், கூகிள் கணக்கா, சிம்பிளா கண்ணை உறுத்தாம, அழகா இருக்கும்.
ஆணி புடுங்கர நேரத்துல கிசு கிசு படிச்சாலும், தூர நின்னு பாக்கரவனுக்கு, பசங்க ஏதோ முக்கியமான டாக்குமெண்ட்டுதான் படிக்கராங்கன்னு ஒரு பிரமையை ஏற்படுத்தும்.

அப்படி இருந்த டமில்சினிமா.கோம், சமீப காலத்தில், காணச் சகிக்கலை. கசா முசான்னு விளம்பரங்கள், பாப்-அப்பு, பாப்-சைடு, பாப்பு-டௌனுன்னு சுத்தி சுத்தி அடிக்குது அந்த பக்கத்துக்கு போனாவே. 
அதுவும், சில விளம்பரங்கள் முக்கிய செய்திக்கு மேல ஒக்காந்துக்கிட்டு போறதுக்கே அடம் பிடிக்குது.
லேப்டாப்பிலேயே இப்படி அடம்புடிக்குதுன்னா, ஸ்மார்ட் ஃபோனில் சுத்தமா உபயோகிக்கவே முடியாத அளவுக்கு விளம்பரங்கள் அழிச்சாட்டியம் பண்ணுது. 

இப்பெல்லாம், இணையத்தை அலசுவதற்கு, லேப்-டாப்புகளை விட,, ஸ்மார்ட் ஃபோன் தான் எல்லாரும் அதிகமா பயன் படுத்தறாங்கங்கரது, உபரித் தகவல்.

ஆர்.எஸ்.அந்தணன் அண்ணே, காசு முக்கியம் தான். ஆனால், தங்க முட்டை இடற வாத்தை, அறுத்துட்டா, வாத்து செத்துடும்ணே.  

உசாரு. டமில்சினிமா.கோமை, பழைய படி, மேன்மையான, சினிமா தகவல் சுரங்கமாகவும், எளிமையானதாகவும் மாற்றும் படி, மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

-ஆணி பிடுங்குபவர் சங்கம்

நம்ம விளம்பரம் :) பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா? Mile Sur video